இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா அவரது மனைவியுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக மிஸ்ரா மற்றும் ரசூல் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்றுள்ளார். அப்போது குஜராத்தின் ஜாம்நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் ஸ்கூட்டி எதிர்பாராதவிதமாக அவர் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறு காயம் அடைந்த அந்த மாணவியை ஜடேஜாவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஜடேஜா மற்றும் அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்
January 30, 2017
0
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா அவரது மனைவியுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக மிஸ்ரா மற்றும் ரசூல் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்றுள்ளார். அப்போது குஜராத்தின் ஜாம்நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் ஸ்கூட்டி எதிர்பாராதவிதமாக அவர் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறு காயம் அடைந்த அந்த மாணவியை ஜடேஜாவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஜடேஜா மற்றும் அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment
0 Comments