Type Here to Get Search Results !

தோனியின் பேச்சை கேட்காத கோஹ்லி தோல்வியில் முடிந்த பரிதாபம்





இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள்  குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள்  எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணியின் தலைவரான மோர்கனுக்கு பந்து வீசுவார். அப்போது பந்தை எதிர்கொண்ட மோர்கன் அடிக்க முடியாமல் சற்று தடுமாறி பேட்டை நீட்டுவார், ஆனால் பந்தானது அவரை ஏமாற்றி கீப்பரான தோனியிடம்  சென்று  விடும் தோனியோ  பந்தானது பேட்டில் பட்டு தான் வந்துள்ளது போல் நடுவரிடம் அவுட்டிற்கு முறையிடுவார். ஆனால் நடுவர் அவுட் இல்லை என கூற, உடனடியாக இந்திய அணியின் தலைவரான கோஹ்லி தோனியை  திரும்பி பார்க்காமல் DRS முறைக்கு அப்பீல் செய்து விடுவார்.  DRS முறையில் நாட் அவுட் என்றே மூன்றாவது நடுவர் அறிவிப்பார். இதில் கோஹ்லி நடுவரிடம் DRS முறைக்கு அப்பீல் செய்து கொண்டிருக்கும் போது இது அவுட் இல்லை என்று கூறுவார். ஆனால் அதை கோஹ்லி சரியாக கவனிக்கவில்லை.  இதனால் இந்திய அணியின் DRS Review கோஹ்லியின் அவசரத்தால் தோல்வியில் முடிந்தது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad