Type Here to Get Search Results !

தோனியின் முடிவால் அதிர்ச்சியடைந்த கோஹ்லி




இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.  இதனால் டி20 தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று  ஆக்ரோசத்துடன் களமிறங்கியது. அதே போன்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில் கொல்கத்தாவில் இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணியின் தோனி  சற்று வித்தியாசமாகவே செயல்பட்டுள்ளார்.  இப்போட்டியின் 22வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, இங்கிலாந்து வீரர் மோர்கனுக்கு வீசியுள்ளார். அப்போது அதை எதிர் கொண்ட மோர்கன் பந்தை அடிக்க முற்பட்ட போது, அவரது பேட்டிற்கு இடையில் சென்றது.தைப் பார்க்கையில் பேட்டில் பட்டு சென்றது போல் இருந்தது. இதனால் ஜடேஜாவும், கோஹ்லியும் நடுவரிடம் அவுட்டிற்கு முறையிட்டனர். ஆனால் பந்தை பிடித்த தோனியோ  இதைக் கண்டு கொள்ளாமல் சிரித்தபடியே அடுத்த ஓவருக்கு கீப்பர் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.  ஆனால் நடுவரோ இது நாட் அவுட் என்று கூறினார்.  இதைக் கண்ட கோஹ்லி சற்று அதிர்ச்சியடைந்தது போல், பந்தை பிடித்த தோனியோ அவுட் கேட்கவில்லையே என்று சற்று குழப்பத்துடன் காணப்பட்டார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad